முதல்வர் இ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க. அரசை மத்திய அரசின் பினாமி அரசு என போகிற இடங்களில் எல்லாம் முழங்கிக் கொண்டிருக்கிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். ஆனால் அதைப்பற்றியெல்லாம் துளியும் கவலைப்படாத இ.பி.எஸ்., ஆட்சி அதிகாரத்தின் அத்தனை பலங்களையும் முடுக்கிவிட்டு, எட்டுத்திக்கும் தூள் கிளப்புகிறார். அதன் உச்சம் தான் காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், நெல்லை ஆகிய 4 மாவட்டங்களை பிரித்து, 5 புதிய மாவட்டங்கள் அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை வெளியிட்டு இருக்கிறது தமிழக அரசு. 2021 ம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலையில், இ.பி.எஸ். அரசு, புதிய மாவட்டங்களை அவசர அவசரமாக பிரிப்பது, தமிழகத்தை இரண்டு மாநிலமாக பிரிக்கும் முயற்சியா என எதிர்க்கட்சிகள் கோபமாக முணுமுணுக்கத் தொடங்கி விட்டனர்.
தமிழகத்தை இரண்டாக பிரிக்க அச்சாரம் - மோடி மேஜிக் பலிக்குமா